Wednesday, July 8, 2009

பூமியை காப்போம்...


















பிளாஸ்டிக் என்னும் கொடிய அரக்கனால் இந்த பூமியை அழிக்க நினைக்கும் மனிதர்களுக்கு இந்த பூமியின் முக்கியத்துவத்தை புரிய வைப்பதற்காக இந்த கவிதையை எழுதுகிறேன். இந்த புவுலகை நேசிக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.




மனிதர்களே சிந்தயுங்கள்...

புத்தனும் சித்தனும் உன் வாழ்வை உயர்த்த!
நீ பித்தனாய் அலைவது ஏன்
?

கற்றவரும் கற்றிலார் ஆக, காற்று அடைத்த பந்து உடைய !
உலகத்தாயின் உதிரத்தை உறியாதே!

மாளட்டும் மனித இனம் என்று!
மிருகமும் வேண்டியதோ!

பூமியின் அழிவை காக்க!
இயற்கையின் இறைவன் நினைத்தானே!

காலத்தை மாற்றி!
காலனையும் வென்றானே!

சிறந்து நின்ற மனிதன் இன்று!
செருக்கில் அழிந்து போனானே!

சோலைவனம் பாலைவனம் ஆக!
உன் மகன் எங்கு வாழ்வான்!

நிலவை பார்த்து உண்ட குழந்தை!
இன்று பூமியையே உண்கிறதே!

காலத்தை வென்ற மனிதன்!
காணி நிலத்துக்கு அடிமை ஆனானே!

மனிதன் என்னும் எண்ணம் அழிந்து!
மிருகம் என்று மாறினானே!

கடவுளின் இடம் கூட!
குப்பை மேடு ஆனதேனோ!

பாவங்களை அளிக்க வந்த இறைவன்!
பிளாஸ்டிக் மூட்டை சுமந்தானே!

சுழியமும் இன்று!
சூனியமாய் ஆனதேனோ!

உலக வட்டத்தின் மதிப்பு அறியா மனிதா!
காலத்தின் சுழற்சியில் மாட்டி நீயும் வீழ்ந்தாயோ!

வெள்ளையனை வெளியேற்றிய மண்ணின் மைந்தர்கள்!
இந்த பிளாஸ்டிக் அரக்கனை அளிக்க மீண்டும் பிறப்பாரோ!

அப்படி பிறந்தாலும் இந்த!
மூட மனிதனை வேல்வாரோ!

மரணப்படுக்கையில் இருந்து இந்த!
பூமியை காப்பாற்றுவாரோ!

மனிதனின் அழிவை பரப்ப!
இந்த பிளாஸ்டிக் ஒரு தூதுவனோ!











No comments:

Post a Comment